மதூஷின் மனு 09ம் திகதி வரை ஒத்திவைப்பு…

(FASTNEWS|COLOMBO) தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் எனக் கோரி பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷ் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 09ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டுபாயில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் வைத்து பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷ் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் இதுவரை நாடுகடத்தப்பட்ட நிலையில், மாகந்துரே மதூஷ் மாத்திரம் டுபாயில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.