சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள்…

(FASTNEWS|COLOMBO) 2019 ஆண்டின் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள விஷேட தேவைகள் உடைய விண்ணப்பதாரிகளுக்கு சலுகை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.