சப்ரகமுவ பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பம்…

(FASTNEWS | COLOMBO) – நாட்டில் இடம்பெறும் நிலைமை தொடர்பில் தற்காலிகமாக மூடப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 08ம் திகதி ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் பதிவாளர்வீ.டி.கித்சிறி தெரிவித்திருந்தார்.

பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை எதிர்வரும் 07ம் திகதி தமது விடுதிகளுக்கு வருகை தரும் மாணவர்கள் தமது அடையாளத்தினை உறுதிப்படுத்த மாணவர் அடையாள அட்டை அல்லது மாணவ வரவு அட்டையினை தம்வசம் வைத்துக் கொள்ளுமாறும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மாணவர்களிடம் மேலும் கோரியுள்ளார்.