(FASTNEWS| COLOMBO) – கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும் போது கைது செய்யப்பட்ட கடிதங்கள் தமது அமைச்சுக்கு பொறுப்பானது என அரசு நிறுவனங்கள், கண்டி உடரட்ட பாரம்பரியம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதக் கட்டளைகள் எவ்வித அரச எதிர்ப்பு தகவல்களும் உள்ளடங்கியது இல்லை என தெரிவித்துள்ள அவர், இணையத்தளம் ஒன்றினூடாக பெற்ற தகவல்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், அவற்றினை விநியோகம் செய்வது தொடர்பில் தனக்கு அறிவிக்கவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.