ஷாங்கிரிலா தற்கொலை குண்டுத் தாக்குததாரியின் தொழிற்சாலை ஊழியர்கள் 09 பேருக்கு பிணை…

(FASTNEWS|COLOMBO) – கொழும்பு ஷாங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிக்கு சொந்தமான வெல்லம்பிட்டிய கொப்பர் தொழிற்சாலையில் பணி புரிந்த நிலையில் சந்தேகத்தில் கைதான 10 பேரில் 09 பேருக்கு பிணை வழங்க கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே இன்று(06) அனுமதியளித்துள்ளார்.

அதன்படி, குறித்த சந்தேகநபர்களை தலா 05 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கவும், வெளிநாட்டு பயணங்களுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.