யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன், பதவி இடைநிறுத்தம்…

(FASTNEWS | COLOMBO) – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன், உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் மூலமாக அறிவித்துள்ளார் என்றும் குறித்த கடிதம் இன்று (06) தொலைநகல் மூலமாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் செயலாளரால் கையொப்பம் இடப்பட்ட குறித்த கடிதத்தில், பதவி இடைநிறுத்தல் தொடர்பான காரணங்கள் அல்லது வேறு தகவல்கள் எவையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.