
களுத்துறையில் அலங்கார பூக்கள் உற்பத்தி திட்டம்…
(FASTNEWS|COLOMBO) களுத்துறை மாவட்டத்தில் 87 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அலங்கார பூக்கள் உற்பத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு 66 இலட்சம் ரூபா நிதியை வழங்கியுள்ளது.
கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.