சோதனைகளில் கண்டுபிடிக்கப்படும் ஆயுதங்கள் தொடர்பான காணொளிகளை ஒளிபரப்ப வேண்டாம்…

(FASTNEWS|COLOMBO) ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையில் மீட்கப்படும் வாள்கள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் சகல ஊடக நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.