இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது – கல்வி அமைச்சு…

(FASTNEWS|COLOMBO) நாட்டில் ஏற்பட்ட நிலவரங்கள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 02 வாரக்கால பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பாடவிதானங்களும் உள்ளடக்கூடிய வகையில் நேர அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணைப் பாடசாலை நடவடிக்கைகள் வழமைப் போன்றே இடம்பெறும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.