எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் சோளத்தை பயிரிடும் பணியை நிறைவு செய்யுமாறு கோரிக்கை..

எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் சோளத்தை பயிரிடும் பணியை நிறைவு செய்யுமாறு கோரிக்கை..

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் சோளத்தை பயிரிடும் பணியை நிறைவு செய்யுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மீளவும், படிப்படியாக சோள உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் சேனா படைப்புழுவின் தாக்கத்தை எதிர்க்கொள்ளவேண்டி ஏற்படும். அதன்போது உற்பத்தி நடவடிக்கைக்கான வழிகாட்டிகளை கடைப்பிடிப்பது அவசியமாகும். உடனடி தொலைப்பேசி இலக்கமான 1920 இனைத் தொடர்புக் கொண்டு விவசாய ஆலோசனை சேவையில் தேவையான தொழிற்நுட்ப ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.