(FASTNEWS | COLOMBO) – கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இன்று(10) திருகோணமலையில் வர்த்தக நிலையங்கள் ஹர்த்தாலினை முன்னெடுத்திருந்தது.
இந்நிலையில், கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று சர்தாபுர பகுதியில் கல்வீச்சுக்கு இலக்காகியதோடு, 3ஆம் கட்டை பகுதியில் போக்குவரத்தை மறித்து டயர்கள் எரிக்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.