(FASTNEWS|COLOMBO) அனுமதிப்பத்திரமின்றி கைவசம் வைத்திருக்கும் வெடி பொருட்களை பொலிசாரிடம் ஒப்படைக்க 03 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 14ம் திகதி காலை 06 மணிக்கு முன்னதாக அவற்றை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசெகர கூறியுள்ளார்.