நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் 03வர் கைது…

(FASTNEWS | COLOMBO) – குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் தெஹிவளை மேம்பலத்திற்கு அருகில் வைத்து கைதான நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் 03 பேரையும் இன்று(14) கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக கல்கிஸ்சை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்சை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.