(FASTNEWS|COLOMBO) – வன்முறை தாக்குதலுக்குள்ளான மினுவாங்கொட ஜும்மா பள்ளியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஆகியோர் பார்வையிட்டனர்.




இதேவேளை, கொட்டறாமுல்ல பகுதிக்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹுசைன் பைலா ஆகியோர் பிரதேச மக்களுடன், அங்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினர்.



குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதியின் ஹெட்டிபொல, கொட்டம்பாப்பிட்டி, அனுக்கன உட்பட இன்னும் பல பிரதேசங்களில் தாக்குதலுக்குள்ளான வீடுகள், வர்த்தக நிலையங்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹுசைன் பைலா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நசீர் ஆகியோர் பார்வையிட்டனர்.





