நான் நிலைமையினை கட்டுப்படுத்தவே சம்பவ இடத்திற்கு சென்றேன் – தயாசிறி…

(FASTGOSSIP | COLOMBO) – வடமேல் மாகாண சில இடங்களில் இடம்பெற்ற அமைதியற்ற நிலைமையின் பின்னணியில் சிங்கள இனவாத அமைப்புக்கள் சில உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது அமைதியற்ற முறை தொடருவதற்கு காரணம், கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு பிரிவினர் குறைவே என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வன்முறை சம்பவத்துடன் என்னை சிலர் குற்றஞ் சுமத்துகின்றனர். நான் நிலைமையினை கட்டுப்படுத்தவே சம்பவ இடத்திற்கு சென்றேன் என தெரிவித்திருந்தார்.