(FASTNEWS|COLOMBO) – கெக்கிராவ, மடஎட்டிகம பிரதேசத்தில் இன்று(15) பிற்பகல் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
வேனில் பயணித்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதுடன், விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.