
முப்பது வருடங்களுக்குப் பின்னர் பத்து கொள்கலன் கேரியர் வேகன்கள் இறக்குமதி…
(FASTNEWS|COLOMBO) – இலங்கை புகையிரத வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் விதத்தில் முப்பது வருடங்களுக்குப் பின்னர் பத்து கொள்கலன் கேரியர் வேகன்கள் நேற்று(16) கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டது.
தற்போது இலங்கையின் புகையிரத திணைக்களத்திற்கு 25 கொள்கலன் கேரியர் வேகன்கள் சொந்தமாக வைத்துள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இந்திய கடன் திட்டத்தின் கீழ், 20 கொள்கலன் கேரியர் வேகன்கள் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
அதன் முதலாவது 10 கொள்கலன் கேரியர் வேகன்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்த படகுகளின் மதிப்பு 40 அடி கொள்கலன் எடுத்து செல்லக்கூடிய கேரியர் வேகன்களின் பொறுமதி அமெரிகன் டொலர் 84, 200 ஆகும். அவை சுமார் 15 மில்லியன் இலங்கை ரூபாவாகும்.
கொள்கலன் கேரியர் வேகன்களை MIIKE PANAMA என்ற கப்பல் மூலமே இலங்கைக் கொண்டுவரப்பட்டது. இந்த கப்பல் இலங்கைக்கு ஐந்து கொள்கலன் கேரியர் வேகன்களை இறக்குமதி செய்துள்ளது. இது இந்திய கடன் திட்டத்தின் கீழ் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் மொத்த கொள்கலன் கேரியர் வேகன்களை 30 ஆகும். அதில் எரிபொருள் கேரியரில் ஒன்றின் விலை 85,500 ஆகும் . ஏறத்தாழ ரூ. 15.2 மில்லியனாகும். ஒரு கேரியரிலில் 45,000 லீட்டர் எரிபொருள் (10,000 கேலன்கள்) எடுத்துசெல்ல முடியும். முன்னதாக, 2008 ல், அத்தகைய எண்ணெய் தொட்டி பாக்கிஸ்தான் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.