சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 500 பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) வெசாக் பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சுற்றிவளைப்புக்களில் 10 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய மதுபானம், சோடா மற்றும் மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக, திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 17ஆம் திகதி முதல் இன்று(19) வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கலால்வரித் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.