டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

(FASTNEWS|COLOMBO) இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 17,129 ஆக பதிவாகியுள்ளதாக டெங்கு நோயை ஒழிப்பதற்கான பணியகம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, மேல் மாகாணம் உள்ளிட்ட மாகாணங்கள் பலவற்றில் டெங்கு குடம்பிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் காலநிலையில், டெங்கு குடம்பிகள் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்திருப்பதாக குறித்த பிரிவின் அதிகாரி நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.