கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை இன்று(21) ஆரம்பம்

(FASTNEWS | COLOMBO) – கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை இன்று(21) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

19 கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெறும் குறித்த இந்தப் பரீட்சையில், கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.