ஞானசார தேரரை விடுதலை செய்ய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை

(FASTNEWS | COLOMBO) – பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர் தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ​வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் குறித்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.