பேருவளை பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

(FASTNEWS | COLOMBO) – பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்(21) ஒரு மாதம் பூர்த்தியானதையிட்டு, பேருவளை பிரதேச சபை உறுப்பினர்கள், ​ சபை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, இன்று (21) காலை 10 மணியளவில், அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பேருவளை பிர​தேச சபைத் தவிசாளர் மேனக விமலரத்ன உள்ளிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களே, இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.