(FASTNEWS | COLOMBO) – பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்(21) ஒரு மாதம் பூர்த்தியானதையிட்டு, பேருவளை பிரதேச சபை உறுப்பினர்கள், சபை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, இன்று (21) காலை 10 மணியளவில், அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பேருவளை பிரதேச சபைத் தவிசாளர் மேனக விமலரத்ன உள்ளிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களே, இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.