சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது…

(FASTNEWS|COLOMBO)- குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் ஹெட்டிபொல பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதுடைய குறித்த நபர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் இன்று ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதுடன், ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.