
புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பம்
(FASTNEWS|COLOMBO)- வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த சபையினால் தற்போது 34 பாரிய அளவிலான வீதி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார்.
நாட்டின் ஸ்திர நிலை காரணமாக இடை நடுவில் கைவிடப்பட்டிருந்த இந்த வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.