மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை

(FASTNEWS|COLOMBO)- மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேரை தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் மற்றும் கம்பஹா சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரேமா சுவர்ணாதிபதி ஆகியோரால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ம் திகதி அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் மேஜர் ஜெனரால் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.