பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அறிக்கையிட பிரதிச் சபாநாயகர் தலைமையில் குழு நியமனம்

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிந்து, பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழுவுக்கு, சபாநாயகர் கரு ஜயசூரியவால், 8 பேரடங்கிய குழுவினர், இன்று(23) நியமிக்கப்பட்டது.

பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிங்க தலைமையிலான குறித்த இந்தக் குழுவில், பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரவூப் ஹக்கம், ரவி கருணாநாயக்க, ஜயம்பதி விக்கிரமரத்ன, காவிந்த ஜயவர்தன, ஆசு மாரசிங்க, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.