ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பில் விஷேட விசாரணை

(FASTNEWS|COLOMBO) சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாதவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.