(FASTNEWS| COLOMBO) – அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக நீக்கிக் கொள்வதற்கு சுற்றறிக்கை ஒன்றை வௌியிடுவதாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், வாஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான சுற்றறிக்கை அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.