இன்று 07 மணித்தியால நீர் விநியோகம் தடை

(FASTNEWS|COLOMBO) சில பிரதேசங்களுக்கு இன்று(27) பிற்பகல் 01 மணிமுதல் இரவு 08 மணி வரை 07 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, மத்தேகொட ஹோமாகம, மீபே, பாதுக்கை ஆகிய பிரதேசங்களுக்கும் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.