குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் ஆராய விசேட குழு

(FASTNEWS | COLOMBO) – குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டுவரும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர், ஷியாப்தீன் ஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய ஆறு பேர் அடங்கிய குழுவொன்று சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.