(FASTNEWS|COLOMBO) நீர்க்கொழும்பு – பமுனுகம, பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது கடமைகள் நிறைவடைந்த பின்னர் நீச்சல் குளத்தில் நீராடுவதற்காக சென்ற வேளை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.