(FASTGOSSIP | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்க இந்திய தேசிய விசாரணைகள் ஏஜன்சியின் இருவர் தலைமையிலான குழு கொழும்புக்கு வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பொலிசார் ஒருவரும் மேலும் ஒரு நபரும் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு இலங்கைக்கு வருவதற்கு காரணம் விசாரணைகளின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் இலங்கையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் இந்தியாவுக்கு தேவையான முக்கிய தகவல்களை பெற்றுக் கொளது என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.