மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனத்தினை வழங்கக் கோரி அமைச்சரவை யோசனை

(FASTNEWS | COLOMBO) – எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு குண்டு துளைக்காத மோட்டார் வாகனம் கொள்வனவு செய்வதற்கு அனுமதி கோரி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவையில் யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த யோசனை தொடர்பில் தான் ஆராய வேண்டிய அவசியம் உள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

குண்டு துளைக்காத வாகனம் தொடர்பான கலந்துரையாடலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் ஒத்தி வைத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.