இராணுவத் தளபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஆகியோர் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில்

(FASTNEWS | COLOMBO)- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, பாதுகாப்பு செயலாளர் சாந்த கொட்டோகொட, கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்தன ஆகியோர் இன்று(29) முன்னிலையாக உள்ளனர்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டிருந்த போதிலும் எதிர்க்கட்சியினர் இக்குழுவில் அங்கம் வகிக்க விரும்பவில்லை என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.