(FASTNEWS|COLOMBO) கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரை கடற்கரைக்கு அப்பால் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்பயணம் மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.