போலி நாணயத்தாள்களுடன் இரு பெண்கள் கைது

(FASTNEWS|COLOMBO) கொஹூவல பிரதேசத்தில் 500 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் இரு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொஹூவல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வைத்து குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாலிகாவத்தை பிரதேசத்தினை சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.