சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 20 பேர் நாடு கடத்தப்பட்டனர்

(FASTNEWS|COLOMBO) சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த வாரம் குறித்த நபர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்ட போது அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.