(FASTNEWS|COLOMBO) – அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு எதிர்வரும் 11ம் திகதி செயன்முறை பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் செயன்முறை பயிற்சியின் பின்னர் இருவர் அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேர்முகப் பரீட்சையின் பின்னர் 26 பேர் அலுக்கோசு பதவிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.