டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு

(FASTNEWS|COLOMBO) – வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 19,215 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 19 உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதனால், டெங்கு நோய் பரவக் கூடிய சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, டெங்கு மேலும் பரவுவதற்கு ஏதுவாக உள்ள சுற்றுச் சூழலை சுத்தம் செய்து பேணுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.