(FASTNEWS | COLOMBO) – பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(07) அனுமதி வழங்கியுள்ளது.
2017ஆம் ஆண்டு வெலிகடை – ராஜகிரிய பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த காவற்துறை அதிகாரியொருரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.