(FASTNEWS|COLOMBO) நேற்று இரவு வெல்லவாய ஆதாவெலயாய பிரதேசத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை மற்றும் வெல்லவாய பிரதேசங்களை சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.