(FASTNEWS|COLOMBO) – கடற்படையினரினால் நேற்று(09) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 100 ஆடி நீளமான 106 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது இந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.