குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற பணியாளர்கள் 41 பேர் நாடு திரும்பினர்

(FASTNEWS | COLOMBO) – இலங்கையிலிருந்து குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற பணியாளர்கள் 41 பேர் இன்று(10) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குவைட்டுக்கு பணிப்புரியச் சென்ற 12 பேர், அவர்கள் பணிபுரிந்த வீட்டு எஜமானால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில், இலங்கைத் தூதுவராலயத்தில் தடுத்து வைக்கப்பட்டு இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்களுடன் கடந்த 10 நாள்களாக குவைட்டில் தங்கியிருந்த 29 இளைஞர்களும் இன்று அதிகாலை 2.10 மணியளவில் கட்டார் விமான நிலையத்துக்குச் சொந்தமான கியு. ஆர் – 668 விமானம் மூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.