இந்திய சகலதுறை கிரிக்கெட் ஆட்டக்காரரான யுவராஜ் சிங் ஓய்வு

(FASTNEWS | COLOMBO) – இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ் சிங் (37) இன்று(10) அனைத்து வித போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வடைவதாக அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2000ம் ஆண்டு கென்யாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒருநாள் அணிக்கு சேர்ந்த இவர் 304 ஒருநாள் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் விளையாடியுள்ளார்.

அவ்வாறே டெஸ்ட் போட்டிகள் 40 மற்றும் இருபதுக்கு – 20 போட்டிகள் 58 இல் இலங்கைக்காக விளையாடியுள்ளார்.

யுவராஜ் சிங் 2007 இருபதுக்கு – 20 உலகக் கிண்ண வெற்றி அணியுடன் மற்றும் 2011 ஒருநாள் உலகக் கிண்ண வெற்றி அணி ஆகியவற்றில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.