மண்சரிவு ஏற்படும் அபாயம்

(FASTNEWS|COLOMBO) – மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மண்சரிவு மற்றும் கற்பாறை சரிந்துவிழும் அபாயம் நிலவுவதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நிறுவகத்தின் மண்சரிவு ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட புவியியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.