இ.போ.சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இன்று கலந்துரையாடல்

(FASTNEWS|COLOMBO) – தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று(13) பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இன்று அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பதவி உயர்வுக்கு இணையான வேதன அதிகரிப்பை வழங்குமாறு கோரி தேசிய சேவையாளர் சங்கத்துக்குட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.