சிறுவர்கள் இடையே அம்மை நோய்க்கு ஒத்த வைரஸ் பரவல்

(FASTNEWS | COLOMBO) – சிறுவர்கள் இடையே இந்நாட்களில் அம்மை நோய்க்கு ஒத்த வைரஸ் ஒன்று பரவி வருகின்றதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

முதல் நாளில் சாதாரண காய்ச்சலும் பின்னர் உடம்பில் நீர் கொப்புளங்கள் மற்றும் சிவப்பு புள்ளிகள் உருவாவதாகவும் உடல் பூராகவும் வெகு விரைவில் குறித்த வைரஸ் பரவுவதாகும் விசேட குழந்தைநல மருத்துவர்தீபால் பெரேரா தெரிவித்திருந்தார்

குறித்த வைரசினால் சிறுவர்கள் அதிகம் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புக்கள் இருப்பதால் இவ்வாறு காய்ச்சல் நிலையில் சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதினை தவிர்த்துக் கொள்வது நல்லது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.