ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

(FASTNEWS|COLOMBO) – பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் 02 கிராமும் 320 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை கெசல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை வீரகுல பிரதேசத்தில் 03 கிராமும் 05 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று(21) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.