உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக 23 கோடி ரூபா இழப்பீடு

(FASTNEWS|COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக 23 கோடி ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த 184 பேரின் குடும்பத்திற்காக 18 கோடி பத்து லட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காயமடைந்த 481 பேரில் 387 பேருக்கு இதுவரையில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு நான்கு கோடியே 95 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

சம்பவங்களில் உயிரிழந்த 43 வெளிநாட்டவர்களுக்காக இதுவரையில் இழப்பீட்டுக்கான எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.