(FASTNEWS|COLOMBO) நேற்று நள்ளிரவு 12 மணியுடன் ரயில் தொழிற்சங்கள் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் பல்வேறுப்பட்ட கோரிக்கைளை முன்வைத்து ரயில் இயந்திர சாரதிகள், ஒழுங்குப்படுத்தல், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் ஆகியோர் இணைந்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதன் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்துக்கள் இன்று மாலை அளவில் வழமைக்கு திரும்பும் என ரயில் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.